Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Dienstag, 26. Januar 2016

ஆலய தரிசனம்

ஆலய தரிசன விதி 
 சைவசமயத்தவர் ஒவ்வொருவரும் தினந்தோறும்  திருகோவிலுக்குச் சென்று   பய பக்தியுடன் சுவாமி தரிசனம்  செய்தல் வேண்டும் ஒவொரு நாளும் சுவாமி தரிசனம் செய்ய இயலாதார் சோமவாரம் , மங்களவாரம், சுக்கிரவாரம் , பிரதோஷம் , பௌர்ணமி , அமாவாசை    , திருவாதிரை , கார்த்திகை , மாசப்பிறப்பு , சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் ,சிவராத்திரி , நவராத்திரி , விநாயக சதூர்த்தி , விநாயக சஷ்டி , கந்த சஷ்டி  முதலிய புண்ணிய காலங்களிலேனும் தவறாது ஆலய தரிசனம் செய்தல் வேண்டும் . 

சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் திருக்கோவிலுக்கு சமிபத்திலே  உள்ள புண்ணிய தீர்த்தத்தில்   ஸ்நானம் செய்து தோய்த்து உலர்த்திய வஸ்திரம் தரித்து நித்திய  கருமானுஸ்டானம்   முடித்துக் கொண்டு பரிசுத்தமாக கோவிலுக்கு போக  வேண்டும் .

போகும் போது ஒரு பாத்திரத்திலே தேங்காய் , பழம் , பாக்கு , வெற்றிலை , கற்பூரம் ,  புஷ்பம் , முதலியன கொண்டு போக  வேண்டும் 

ஆலயத்துக்கு சமீபித்ததும்  ஸ்தூல லிங்கமாகிய திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் சிரசிலே குவித்துக் கடவுளை மனதிலே  தியானித்துக் கொண்டே உள்ளே பிரவேசித்து, பத்திர லிங்கமாகிய பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பன்ன வேண்டும் 

ஆண் பிள்ளைகள்  அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும் . திரையங்க நமஸ்காரம் இவ்விருவருக்கும் போது. 
  •  அஷ்டாங்க நமஸ்காரமாவது : தலை ,கையிரண்டு , செவியிரண்டு , மோவாய் ,                   புயங்களிரண்டு  என்னும் எட்டு அங்கங்களும் நிலத்திலே தோயும் படி வணங்குதல் 
  •  பஞ்சாங்க நமஸ்காரமாவது தலை , கையிரண்டு , முழங்கால் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே தோயும் படி வணங்குதல் 
  •  திரியாங்க நமஸ்காரமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்
நமஸ்காரம் மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும் , ஒன்பது தரமாயினும் , பன்னீரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும்.  ஒரு தரம் இரு தரம் பண்ணல் கூடாது. நமஸ்காரம் பண்ணும் போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் சிரசை வைத்து நமஸ்காரம் செய்தல் வேண்டும். நமஸ்காரம் செய்து முடிந்தவுடன் உடனே எழுந்து பிரதட்சினம் பண்ணல் வேண்டும் .

பிரதட்சினம் முடித்தவுடன் சந்நிதானத்தில் மீண்டும் நமஸ்காரம் செய்து உள்ளே போய் கடவுளை தரிசித்து சுத்தமான சித்தத்துடன் பக்தி ரசம் மிகுந்த தேவாரங்களை இயன்ற மட்டும் இராகத்துடன்  பாடி துதி செய்தல் வேண்டும் . பின் அர்ச்சகரை கொண்டு பத்திர புஷ்பங்களால்  சுவாமிக்கு அர்ச்சனை செய்வித்து  தேங்காய், பாக்கு, பழம் முதலியவற்றை நிவேதித்து  கற்பூர ஆரத்தி காட்டுவித்து  அர்ச்சகருக்கு தம்மால் இயன்ற தட்சணை குடுத்து அவரிடம் இருந்து விபுதி பிரசாதங்கள் பெற்று கொள்ளல் வேண்டும்

பின் சுவாமியை தரிசித்து கொண்டு புறம்காட்டது பலிபீடத்துக்கு இப்பால் வந்து நமஸ்காரம் செய்து வடக்கு முகமாக  இருந்து சுவாமியை மனதிலே தியானித்து  பின் எழுந்து விட்டிற்கு  போக வேண்டும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen